Tuesday, October 26, 2010

ஆனந்தவிகடனில் வெளியான கவிதை

சிற்றோடை


சிற்றோடையின் மீது சிறுஇலை

இலைப்படகின்மீது கட்டெறும்பு

கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு

சின்ஞ்சிறு பாரத்தோடும்

மெலிதானத் துடிப்போடும்

காற்றின் திசையில்

நகர்ந்தபடி இருக்கின்றது

அதன் பெருவாழ்வு

2 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லாயிருக்குங்க.

ரவிஉதயன் said...

நன்றி செல்வராஜ்