Thursday, May 27, 2010

ஒரு இடம் காலியாயிருக்கிறது

.









யாருமற்ற வீட்டில்

விழுந்து புரள்கிறது
செய்தியை வாசிக்கச் சொல்லி
ஒரு கடிதம்


யாருமற்ற தெருவில்
கிடந்து மின்னுகிறது
மர்ம அறையைத் திறக்கச்சொல்லி
ஒரு கள்ளச்சாவி


யாருமற்ற அறையில்
மன்றாடுகிறது
மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி
ஒரு தேநீர்க்குவனள
.

யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்
புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது
மெல்லிய தாழை மணம்

யாருமற்ற வெளியில்
எல்லோருக்கும்

ஒரு இடம் காலியாயிருக்கிறது

உயிர்மையில்வெளியான கவிதை











































































































No comments: