Wednesday, December 17, 2014

மியாவ் இசை





பூனையின் மியாவ் இசை 
அறை முழுவதும் நிரம்புகிறது 
அதன் இசைக்கு மயங்கி 
எங்கோ 
ஒரு குவளைப் பால் 
பொங்கி வழிகின்றது.

Wednesday, October 15, 2014

ஈசல்களுக்கு.







இறந்து போகிற துயரங்கள் 
என்றுமிருந்ததில்லை. 
மீண்டும் மீண்டும் 
சுடரிடம் சொல்ல 
ஏதோ 
இருந்திருக்கின்றது ஈசல்களுக்கு.



  

Wednesday, October 1, 2014

கற்றுக்கொண்டது







சுடரிடம் நான் 
கற்றுக்கொண்டது 
அணையும் வரை தன் நடனத்தை 
வசீகரத்தில் வைத்து கொள்வது. 
மெழுகுவர்த்தியிடம் 
கற்றுக்கொண்டது
அணைகிற வரை
சுடரின் நடனத்திற்கு
உருகுவது.

Thursday, May 8, 2014

நட்பு



துல்லியமாக 
வரைந்து கொண்டேன் உங்களை 
இனி
கச்சிதமாகக் கத்தரிக்க வேண்டும் 
அதன் அளவுகளை!

Monday, April 28, 2014

சுஜாதா விருது 2014- கவிதை











 இந்த வருட சுஜாதா விருது 2014- கவிதை
இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்
கவிதை
ஆசிரியர்: ரவி உதயன்
தேர்வுக் குழு: கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், இந்திரன்
வெளியீடு: வம்சி பதிப்பகம்.